Friday, April 11, 2008

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடர வேண்டும்: அதிமுக எம்.எல்.ஏ கேரிக்கை

சென்னை, ஏப். 10: தங்கள் ஆட்சியில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தொடர வேண்டும் என்று அதி முக எம்.எல்.ஏ தாமோதரன், அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.பேரவையில் வியாழக்கி ழமை நடைபெற்ற பொதுப்ப ணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத் தில் அவர் பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில், மழைநீர் சேகரிப்புத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத் தப்பட்டது. அதனால் நிலத் தடி நீர் மட்டம் உயர்ந்தது.ஆனால் தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகி றது. எனவே மீண்டும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை அரசு தொடர வேண்டும்.

திமுக ஆட்சியில் காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரி யாறு பிரச்னை, பாலாறு பிரச்னை, பாண்டியாறு புன் னம்பழா பிரச்னை, ஒகேனக் கல் பிரச்னை என்று நதிநீர் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இந்தப் பிரச்னைகள் தீர்க்கப் பட்டால் குடிநீர்ப் பிரச்னை யும் தீரும். மின் உற்பத்தியும் பெருகும்.

இந்தப் பிரச்னைக ளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்திப் பயன் இல்லை. மத் திய அரசை நம்பியும் பிரயோ ஜனம் இல்லை. நீதிமன்றம் மூலம் நல்ல தீர்ப்பை பெறுவ துதான் ஒரே வழி.மணல் கொள்ளை:அதி முக ஆட்சியில் மணல் கொள்ளை தடுக்கப்பட்டது. குறைந்த விலையில் மணல் கிடைத்தது. தற்போது ஆறுக ளில் அதிக அளவு மணல் எடுப்பதால் நிலத்தடி நீர்மட் டம் குறைந்து வருகிறது.

தோல் மற்றும் சாயப் பட்ட றைக் கழிவுகளினால் நொய் யல், பவானி ஆறுகள் மாசு பட்டுள்ளன. பரம்பிக்குளம் ஆழியாற்றில் இருந்து திரு மூர்த்தி அணைக்கு 49 கி.மீ.நீளத்துக்கு காண்டூர் கால் வாய் உள்ளது. இந்தக் கால்வா யில் செயற்கையாகவும், இயற் கையாகவும் உடைப்பு ஏற்படு வதால் சுமார் நான்கு டி.எம்.சி. தண்ணீர் வீணாகி றது. அதனை அரசு சரி செய்ய வேண்டும்.

ஏக்கர் வாரியாக தண்ணீர் தீர்வை விதிக்க வேண்டும்:

தற்போது பயிர் வாரியாக தண்ணீர் தீர்வை விதிக்கப்படு கிறது. அதனை மாற்றி ஏக்கர் வாரியாக தண்ணீர் தீர்வை விதிக்க வேண்டும். ஏரி, குளம் போன்ற நீர்நிலைப் பகுதிக ளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.எம்.எல்.ஏ நிதியிலிருந்து, பாசனக் கால்வாயை தூர்வார அனுமதிக்க வேண்டும் என் றார் தாமோதரன்.

No comments: