சென்னை, ஏப். 8: கேள்வி நேரத்தை ஒத்திவைத்து, ஒரு குறிப்பிட்ட பிரச்னையை விவாதிக்க அனுமதிக்க வேண் டும் என்று சட்டப்பேரவை யில் அதிமுகவினர் செவ் வாய்க்கிழமை கோரினார்.ஆனால் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தலை மையில் அதிமுகவினர் வெளிந டப்பு செய்தனர்.
சட்டப்பேரவைக்கு ஜெயல லிதா செவ்வாய்க்கிழமை வந் தார். பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியதும் முக் கிய பிரச்னை ஒன்றை விவா திக்க, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர் கோரினார். இதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார்.""கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க பேரவையில் ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எனவே, அனும திக்க முடியாது'' என்றார் பேர வைத் தலைவர்.
இதைத் தொடர்ந்து, கேள்வி நேரம் தொடங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரி வித்த அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கோஷமிட்டனர். அவர்களு டன் மதிமுக உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர்.விதியை மீறி அவையை ஒத் திவைக்க முடியாது'' என்றார் பேரவைத் தலைவர்.தொடர்ந்து அதிமுக - மதி முக உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். அப் போது அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
""பேர வையை நடத்த ஒத்துழைப்புக் கொடுங்கள். அமைதியாக இருங்கள்'' என்றார் பேரவைத் தலைவர். ஆனாலும், பிரச் னையை விவாதிக்கக் கோரி அதிமுக-மதிமுக உறுப்பினர் கள் தொடர்ந்து வலியுறுத்தி னர். எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பினர். கேள்வி நேரம் முடிந்தவுடன் பரிசீலனை செய்யப்படும். இப்போது உட் காருங்கள்'' என்றார்.
ஆனா லும், அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி யவாறு இருந்தனர். அமைதி காக்கும்படி பேரவைத் தலை வர் கேட்டுக்கொண்டார்.ஆனால் அதிமுகவினர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திய வாறு இருந்தனர். அதிமுகவி னரின் கோரிக்கைக்கு அனுமதி தர மறுத்தார் பேரவைத் தலை வர். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையில் அதிமுக-மதிமுக உறுப்பினர் கள் வெளிநடப்புச் செய்தனர்.
No comments:
Post a Comment