Friday, April 11, 2008

இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு கூடாது

சென்னை, ஏப். 11: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், பிற்படுத் தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வருமான வரம்பு நிர்ணயிக்கக்கூடாது என மத் திய அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதி யுள்ளார்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட் டம் சரியானதே என்று உச்ச நீதிமன் றம் தீர்ப்பு கூறியுள்ளது.பிற்படுத்தப்பட்டோரில் பொருளா தார ரீதியில் முன்னேறிய பிரிவின ருக்கு (கிரீமி லேயர்) இந்த இட ஒதுக் கீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட் டுள்ளது.இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர் ஜுன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:

மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 27 சதவீத இடஒ துக்கீட்டை வழங்கியபோது சமூக நீதிக்காக போராடி வருபவர்களும், சமூகத்திலும், கல்வியிலும் பின்தங் கிய வகுப்பைச் சேர்ந்தவர்களும் மிக வும் மகிழ்ச்சி அடைந்தனர். உச்ச நீதி மன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப் பால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகி உள்ளது.சமூக நீதியை நிலைநிறுத்த மத்தி யில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட் டணி மேற்கொண்ட இரண்டாவது முயற்சி இதுவாகும்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் இருந்த வி.பி.சிங் அரசு மத்திய அர சுப் பணிகளில் இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்தார்.இடஒதுக்கீட்டுக் கொள்கையை முழு வதும் நிறைவேற்றி, ஆண்டாண்டு காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட, பின்தங்கிய சமூக மக்களின் வாழ்க் கையை உயர்த்த இன்னும் நாம் பய ணிக்க வேண்டும்.

வெற்றி காண்பீர்கள்...

பொரு ளாதார ரீதியில் முன்னேறிய குடும் பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பிரச்னையையும் நீங்கள் (அர் ஜுன் சிங்) தீர்த்து, வெற்றி காண்பீர் கள் என நம்புகிறேன்.

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்ப டுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒ துக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்திய ஒரே மாநிலம் தமிழகம்தான். இதற் காக, தமிழக சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மூலம் தமி ழக மக்களின் கனவு நிறைவேறி இருக் கிறது. இதற்காக நீங்கள் (அர்ஜுன் சிங்) மேற்கொண்ட முயற்சிகளுக்கும், தொடர் நடவடிக்கைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்என மத்திய அரசைதொடர்ந்துவற்புறுத்திய ஒரே மாநிலம் தமிழகம்தான். இதற்காக, தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments: