Friday, April 11, 2008

தமிழகம் "இழந்த' உரிமைகளை பாமக ஆட்சிக்கு வந்து மீட்கட்டும்

சென்னை, ஏப். 10: 2011-ல் பாமக ஆட்சிக்கு வந்த தும், தமிழகம் இழந்த உரி மையை மீட் கட்டும் என்று முதல்வர் கரு ணாநிதி கூறி யுள்ளார்.மதுரையில் புதன்கிழமை (மார்ச் 9) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், ""'இரண்டு திராவிடக் கட்சிகளின் போட்டி அரசியலால் தமிழகம் தனது உரிமையை இழந்துள்ளது' என்று கூறியிருந்தார்.அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி, கேள்வி -பதில் வடிவில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இரண்டு திராவிடக் கட்சிக ளின் போட்டியால் தமிழகம் தனது உரிமையை இழந்துள்ளது என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.அதற்கு மாற்றாகத்தான் 2011-ல் அவர் ஆட்சிக்கு வரப் போகி றாரே? அப்போதாவது தமிழகம் இழந்த உரிமையைப் பெறட்டும்.

மத்திய அரசு ரூ. 60,000 கோடி விவசாயக் கடனை ரத்து செய்த தோடு நின்று விடாமல், தொடர்ந்து விவசாயிகள் கடன் பெறவும், வேளாண் முன்னேற்றத் திற்கான உதவிகளையும், சலுகைக ளையும் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.

கனவு கண்டிருப்பார்களா?:

ஒகேனக்கல் திட்டத்தை நிறை வேற்றக் கோரி சில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்துள் ளார்கள்.ஆளுநர் அந்த மனுவைப் பெற் றுக் கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? தமிழகத்தில் குடி யரசுத் தலைவர் ஆட்சி நடப்பதாக அந்த அறிவார்ந்த அதிகாரிகள் கனவு கண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.தேர்தல் முடியும் வரை கிளர்ச்சி களுக்கோ, போராட்டங்க ளுக்கோ இடம் தராமல் அமைதி காப்போம் என்று வேண்டுகோள் விடுத்தது கோழைத்தனமா? அல் லது துரோகமா?

ஒகேனக்கல் திட்டத்தை படிப்ப டியாக எப்படி நிறைவேற்றுவது என்று ஒப்பந்தத்தில் தெளிவாகப் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை புரிந்து கொள்ளாமல் சில அவச ரக்காரர்கள், ""மாலையில் ஒப்பந் தம், நள்ளிரவில் திட்டம் தொடக் கம், மறுநாள் காலையில் திறப்பு விழா'' என்று மந்திரத்தில் மாங் காய் விழச் செய்வோம் என்கிறார் கள்.அவர்கள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தேதி வாரியாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந் தத்தை புரிந்து கொள்ளட்டும்.

ஒகேனக்கல் திட்டத்துக்கு திட்ட மேற்பார்வை ஆலோச கரை நியமிக்க, பிப்ரவரி 2008 முதல் மார்ச் 2008 வரை ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இது பற்றி ஜூலை 2008-ல் முடிவு எடுக்கப்ப டும்.விரிவான திட்ட அறிக்கையை யும், ஒப்பந்தப்புள்ளி ஆவணங்க ளையும் திட்ட மேற்பார்வை ஆலோசகர் அக்டோபர் 2008-ல் ஆய்வு செய்வார்.இந்தத் திட்டத்துக்கு டிசம்பர் 2008 -ல் ஒப்பந்தப்புள்ளி கோரப்ப டும். மார்ச் 2009-ல் ஒப்பந்தப்புள் ளிகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெ டுக்கப்படும். டிசம்பர் 2012-ல் திட் டம் முடிவடையும்.சில அவசரக் கட்சித் தலைவர் கள் அரசியலிலும் "ஸ்டண்ட்' என்று ஆரம்பித்தால் அது நடக் கிற காரியமா? என்பதை ஆர அமர்ந்து ஆலோசிக்க வேண்டும்.

விளம்பர பலகைகள் அகற்றும் பணி தொடங்கி விட்டது:

அனு மதி பெறாத விளம்பரப் பலகை களை அகற்ற தமிழக அரசு பிறப் பித்த உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. அதன்படி விளம்பர பலகை களை அகற்றும் பணி புதன்கி ழமை இரவே தொடங்கி விட் டது. இந்த நல்ல முயற்சிக்கு பல கைகளை வைத்திருப்பவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் 2002-ம் ஆண்டு ஆளுநர் உரையில் பஸ் களை படிப்படியாக தனியார் மய மாக்க முடிவு செய்யப்பட்டு அறி விக்கப்பட்டதை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு பேரவையில் படித்துக் காட்டி னார். இந்த அறிவிப்பு வந்த நேரத்தில், அதிமுக அரசு பஸ்களை தனியார் மயமாக்கப் போவதாக அறிவித் துள்ளதே என்று செய்தியாளர் கள் கேள்வி கேட்டார்கள்.

அவர்கள் அப்படி செய்தால் திமுக ஆட்சிக்கு வந்ததும் அதனை ரத்து செய்வோம் என்று பதில் கூறினேன். அது அப்போது பத்திரிகைகளில் வந்துள்ளது.அந்த அறிவிப்புக்குப் பிறகுதான் அதிமுக அரசு பஸ்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட் டது என்று முதல்வர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments: