சென்னை, ஏப். 10: விளைநிலங்களில் தொழிற்சாலைகள் கட்ட அரசு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ வேல்துரை அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசிய தாவது:
தாமிரபரணி பாசனப் பகுதிக்கு அதிக நிதி ஒதுக்கி கால் வாய்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும். எலுமிச்சை யாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.இரண்டு போகம், மூன்று போகம் விளையும் நிலங்களில் தொழிற்சாலைகள் கட்ட அரசு தடை விதிக்க வேண்டும்.
விளைநிலங்களில் ஒரு தொழிற்சாலை கட்டினால்கூட அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவ சாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. மணல் எடுப்பதை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment