Friday, April 11, 2008

சமூக நீதிக்கான போராட்டம் முற்றுப்பெறவில்லை

சென்னை, ஏப். 11: சமூக நீதிக் கான போராட்டம் முற்றுப்பெற வில்லை என்று முதல்வர் கருணா நிதி கூறியுள்ளார்.மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று வியா ழக்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்தது. இந்தத் தீர்ப்பை வர வேற்று தமிழக சட்டப் பேரவை யில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

பேரவையில் வெள்ளிக்கி ழமை கேள்வி நேரம் முடிந்ததும், சட்டமன்ற பாமக தலைவர் ஜி.கே. மணி இந்தத் தீர்மா னத்தை முன்மொழிந்தார். சட்ட மன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் வழிமொழிந்தார்.சட்டமன்ற மார்க்சிஸ்ட் தலை வர் கோவிந்தசாமி, இந்திய கம்யூ னிஸ்ட் தலைவர் சிவபுண்ணியம், மதிமுக தலைவர் கண்ணப்பன் ஆகியோர் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.இறுதியில் இந்தத் தீர்மானத் தின் மீது முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

சமூக நீதிக்கான பயணம் தமிழ கத்தைப் பொருத்தவரை நீதிக் கட்சியின் அமைச்சர் முத்தையா காலத்திலேயே தொடங்கி விட் டது.1920-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் கம்யூனல் ஜி.ஓ. தொடங்கி, மத்திய அரசால் 2007-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வரை சமூக நீதிக்கான பயணம் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

பெரியார், அண்ணா, காமரா ஜர் ஆகியோர் இணைந்து கொடுத்த அழுத்தம் காரணமாக, ஜவாஹர்லால் நேரு இந்திய அர சியல் சட்டத்தில் இட ஒதுக்கீட் டுக்கான முதல் திருத்தத்தை செய் தார். அன்று தொடங்கி, இந்திய அரசியல் சட்டத்தில் 93-வது திருத்தம் வரை இட ஒதுக்கீட்டுப் பயணம் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

வி.பி. சிங் ஆட்சியில்...:

அகில இந்திய அளவில் இட ஒதுக்கீட் டிற்கான முதல் கதவு 1990-ம் ஆண்டு அன்றைய பிரதமர் வி.பி.சிங்கால் திறந்து வைக்கப்பட்டது.அதனால்தான் மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கிடைத் தது.அப்போது அதனை எதிர்த்து வட மாநிலங்களில் மாணவர் களை தீக்குளிக்கச் செய்கிற அள வுக்கு காட்டுமிராண்டித்தனமான எதிர்ப்புகள் வந்தன. அவற்றை யெல்லாம் மீறி இன்று சமூக நீதிக்கு வெற்றி கிடைத்துள்ளது.சமூக நீதிக்கான போராட்டம் முற் றுப் பெற்றுவிடவில்லை. இன் னும் முழுமை அடைய வேண்டி யது ஏராளமாக இருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்து உச்ச நீதி மன்றத்தால் தடுக்கப்பட்டு, நம் மைப் போன்றவர்கள் கொடுத்த போர்க்குரல் காரணமாக மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 சத வீத இட ஒதுக்கீடு கிடைத்துள் ளது.கிரீமி லேயர்: கம்யூனிஸ்ட் நண் பர்கள் சுட்டிக்காட்டிய "கிரீமி லேயர்' பற்றி அமைச்சரவையில் யோசிக்க இருக்கிறோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் என்னிடம் கூறியது ஆறுதல் தரக் கூடிய செய்தியாகும்.

இட ஒதுக்கீட்டில் "கிருமி' (கிரீமி லேயர்) வேண்டாம் என்ப துதான் நமது வாதம். அதை விலக் கிக் கொள்ள மத்திய அமைச்ச ரவை யோசித்து முடிவு எடுக்கும்.இந்தத் தீர்மானத்தை, காங்கி ரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் வரவேற்றுள் ளன. வெளியே சொல்லாவிட்டா லும் அதிமுக, மதிமுக ஆகிய கட்சி களுக்கும் இந்தத் தீர்மானம் உடன் பாடானதுதான் என்பதை நான் அறிவேன்.

இந்தத் தீர்மானத்தின்மீது அதி முகவினர் பேச வேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கேட்டுக் கொண்டார்.அதற்கு, "மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி' என எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.

No comments: