சென்னை, ஏப். 8: தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கி ழமை 10 நிமிஷங்களுக்கும் மேலாக மின்தடை ஏற்பட் டது. இதனால் பேரவை நூல கம் உள்ளிட்ட முக்கிய இடங் கள் இருளில் மூழ்கின.காலை 10.24 மணிக்கு மின் தடை ஏற்பட்டபோது, பேர வையில் கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தது. மின்தடை ஏற்பட்ட அடுத்த நொடியே பேரவையில் மின்சாரம் வந்து விட்டது.
ஆனால் அவையில் உள்ள எலக்ட்ரானிக் கடிகாரங் கள் 10 நிமிஷங்களுக்கு மேலாக வேலை செய்ய வில்லை.""பேரவையில் காலை 10.24 மணிக்கு மின்தடை ஏற்பட் டது. அது எந்த வகை மின் வெட்டு'' என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் கேள்வி எழுப்ப, அவையில் சிரிப்பலை எழுந்தது.
No comments:
Post a Comment