Friday, April 11, 2008

ரேஷன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: கிருஷ்ணசாமி நன்றி

சென்னை, ஏப். 8: ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளதற்கு, தமிழக காங் கிரஸ் தலைவர் எம். கிருஷ்ண சாமி நன்றி தெரிவித்துள்ளார்.இது குறித்து செவ்வாய்க்கி ழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி நீண்ட காலமாகப் போராடி வருகி றார்கள். அவர்களின் கோரிக் கையை ஏற்று, ரூ. 1,300 இருந்த ஊதியம் ரூ. 3,072 ஆகவும், ரூ.3,000-ஆக இருந்த ஊதியம் ரூ.5,786 ஆகவும் உயர்த்தப்படும் என்று அமைச்சர் எ.வ. வேலு அறிவித்துள்ளார்.

அதுபோல 5 முதல் 15 ஆண்டுகளாக பணி புரிந்து வருபவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் சம்ப ளம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு ரேஷன் ஊழியர்களின் மனக்கு றையை நீக்கும். இதற்காக முதல்வர் கருணாநிதிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள் வதாக அவர் கூறியுள்ளார்.

No comments: