Friday, April 11, 2008

பஸ்களை தனியார் மயமாக்க திட்டமிட்டோமா?

சென்னை, ஏப். 9: அரசு பஸ் களை தனியார் மயமாக்க கடந்த ஆட்சியில் முயற்சி மேற்கொள் ளப்பட்டது என்று போக்குவரத் துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதால் பேரவையில் திமுக -அதிமுக உறுப்பினர்க ளுக்கு இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின் போது புதன்கிழமை இது குறித்து நடைபெற்ற விவாதம்:

சண்முகவேலு (அதிமுக):

பல பெயர்களில் பஸ்கள் விடப்பட்டு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.திமுக அரசு கடன் பெற்றுத்தான் புதிய பஸ்களை இயக்கி வருகிறது.

அமைச்சர் கே.என். நேரு:

கடன் வாங்குவது எல்லா ஆட்சி யிலும் நடப்பதுதான். அதிமுக ஆட்சியில் புதிய பஸ்கள் எதுவும் வாங்கவில்லை. அதனால் கடனும் வாங்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுக்கால அதி முக ஆட்சியில் 5,600 பஸ்கள் மட் டுமே புதிதாக வாங்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 9,901 பஸ்கள் வாங்கப்பட்டுள் ளன.

எக்ஸ்பிரஸ் பஸ்கள், எல்.எஸ்.எஸ் பஸ்கள், சொகுசு பஸ்களுக்கான கட்டணங்களை திமுக அரசு நிர்ணயிக்கவில்லை.கடந்த அதிமுக ஆட்சியில் நிர்ண யிக்கப்பட்ட கட்டணம்தான் தற் போது நடைமுறையில் உள்ளது.அரசு பஸ்களை தனியார் மய மாக்க அதிமுக ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):

பஸ்களை தனியார் மயமாக்க அதிமுக ஆட்சியில் எந் தவிதமான முயற்சியும் எடுக்க வில்லை. அமைச்சர் வேண்டும் என்றே தவறான தகவலைத் தருகி றார்.

நத்தம் விஸ்வநாதன் (அதி முக):

நஷ்டத்தில் இயங்கும் சில வழித்தடங்களை மட்டும் தனியா ரிடம் விட அதிமுக ஆட்சியில முடிவு எடுக்கப்பட்டதே தவிர போக்குவரத்துத் துறையை தனி யார் மயமாக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.

அமைச்சர் கே.என். நேரு:

அதி முக அரசு பஸ்களை தனியார் மய மாக்கினால், திமுக ஆட்சிக்கு வந் ததும் மீண்டும் தேசிய மயமாக்கு வோம் என்று கருணாநிதி கூறி னார். அதன் பிறகுதான் அந்த முயற்சி நின்றது.

முதல்வர் கருணாநிதி:

காங்கி ரஸ் ஆட்சிக் காலத்தில் 100 மைல் தூரம் செல்கின்ற நீண்ட தூர பஸ் களை, அப்போதைய போக்குவரத் துத் துறை அமைச்சர் வெங்கட்ரா மன் தேசிய மயமாக்கினார்.அதன் பிறகு நான் முதல்வராக இருந்தபோதுதான் போக்குவரத் துத் துறை தேசிய மயமாக்கப்பட் டது. அப்பேது டி.வி.எஸ்., பொள்ளாச்சி மகாலிங்கம், குடந்தை ராமன் அண்டு ராமன் போன்ற பஸ் உரிமையாளர்கள் தானாக முன்வந்து பஸ்களை தேசியமயமாக்க ஒப்புக் கொண் டார்கள்.

யாரையும் புண்படுத்தாமல், நஷ் டத்துக்கு ஆளாக்காமல் சுமுக மான முறையில் பஸ்கள் தேசிய மயமாக்கப்பட்டது. இடையி டையே சிலர் பஸ்களை தனியார் மயமாக்கப் போகிறார்கள் என்று வதந்திகளை பரப்பியிருக்கலாம்.ஆனால் எதிர்க்கட்சிகள் யாரும் அதற்கு இடம் தரவில்லை.நல்ல புரட்சிகரமான முடிவு எடுத்த பிறகு அதிலிருந்து கீழ் நோக்கிப்போக எந்த அரசும் முன் வராது என்பது நண்பர் செங் கோட்டையனுக்கு நன்றாகத் தெரியும்.14 அல்லது 15 பிரிவுகளாக இருந்த போக்குவரத்தை ஒரே நிறு வனமாக திமுக அரசுதான் மாற்றி யது.

No comments: