சென்னை, ஏப். 10: தமிழகத்தில் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் குளங்களையும் பொதுப் பணித்துறை ஏற்க வேண் டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பி. ராமசாமி அர சுக்குக் கோரிக்கை விடுத்தார்.பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் அவர் பேசியது:
ஊராட்சிகளில் உள்ள குளங்கள் அனைத்தையும் பொதுப் பணித் துறை ஏற்க வேண்டும். தடுப்பணை கள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு இந்தக் குளங்களை தூர் வார வேண்டும்.தமிழகத்துக்குள் ஓடும் ஆறுகளை இணைக்க முடிவு எடுத்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற் கிறது.
ஏரி, குளம் போன்ற நீர்நிலை கள் மாசுபட்டு வருகிறது. குடிநீர் எடுக்க பயன்படும் குளங்களையா வது மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும்.நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக் கிரமிப்பை அகற்ற வேண்டும். நதிநீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாக தமி ழகம் மாறி வருகிறது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.பொதுப்பணித் துறை கட்டடங் கள் பல இடங்களில் பழுதடைந்து பயன்படாத நிலையில் உள்ளது.இதனை அரசு சரி செய்ய வேண்டும் என்றார்.
வை. காவேரி (பாமக):
குஜராத் மாநிலத்தில் நர்மதா திட்டத்தை செயல்படுத்தி லட்சக்கணக்கான ஏக் கர் நிலத்துக்கு பாசன வசதி செய்யப் பட்டுள்ளது.அதுபோல சேலம், நாமக்கல் மாவட்டத்துக்கு மேட்டூர் நீரைக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 320 அடி உயரத் துக்கு நீரைக் கொண்டுபோக முடி யாது என்கிறீர்கள். அந்த அளவு உய ரத்துக்கு நீரை கொண்டுச் சென்றால் மின் உற்பத்தியும் செய்ய முடியும்.
பாலாற்றின் குறுக்கே தடுப்ப ணைகள் கட்டி நீர்வளத்தை அதிக மாக்க வேண்டும். கர்நாடகத்தில் காவிரி பாசனப் பரப்பு அதிகரித் துள்ளது. ஆனால் தமிழகத்தில் அதிகமாகவில்லை. தகவல் அறியும் உரிமை ஆணையத்தை சுயசார்பு டையதாக மாற்ற வேண்டும்.அதற்கு தனியாக நிதி ஒதுக்க வேண் டும் என்றார்.
No comments:
Post a Comment