Friday, April 11, 2008

பஸ் கட்டணத்தைப் பற்றி மக்கள் கவலைப்படவில்லை

சென்னை, ஏப். 9: பஸ் கட்ட ணத்தைப் பற்றி மக்கள் கவலைப்ப டவில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமரமூர்த்தி தெரிவித் தார்.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசிய தாவது:

குறித்த நேரத்தில், குறித்த இடத்துக்கு சென்று சேர வேண்டும் என்பது குறித்துதான் மக்கள் கவலைப்படுகிறார்கள்.பஸ் கட்டணத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.குறித்த நேரத்தில் சில இடங்க ளுக்கு செல்ல முடியாமல் பல குடும்பங்கள் பிரிந்துள்ளன. தின மும் ரூ.50 சம்பாதிக்கும் தயிர் விற் கும் ஏழைப் பெண்கள்கூட தற் போது அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர். அந்த அளவுக்கு கட்டணம் குறைவாக உள்ளது.

பஸ்ஸில் குவா குவா சத்தம் இல்லை:

அதிகமான பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் குறித்த நேரத்தில் குறித்த இடத் துக்கு செல்ல முடிகிறது. இத னால் திமுக ஆட்சியில் "பஸ்ஸில் குழந்தை பிறந்தது', "பஸ்ஸில் குவா குவா சத்தம்' போன்ற செய்திகள் வருவதில்லை.ஆனால் கடந்த ஆட்சியில் பஸ் கள் மோசமான நிலையில் இருந்த தால் "பஸ்ஸில் குழந்தை பிறந்தது' என்ற செய்தி அதிகமாக வந்து கொண்டிருந்தது.கடந்த ஆட்சியில் மழை பெய் தால் பஸ்ஸýக்குள் குடை பிடிக்க வேண்டி இருந்தது. ஆனால் தற் போது அந்த நிலை இல்லை. தற் போது மக்கள் காத்திருந்து அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர்.

பாண்டியன், பல்லவன் வரும் நேரத்தில்...:

பாண்டியன், பல்ல வன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் நேரத்தில் அரியலூர் ரயில் நிலை யத்துக்கு வந்து செல்ல பஸ் இயக்க வேண்டும்.அரியலூரில் இருந்து சென்னை, திருப்பதி போன்ற இடங்களுக்கு பஸ் இயக்க வேண் டும். பள்ளிப்பட்டில் போக்குவ ரத்து பணிமனை அமைக்க டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன் 2 ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற்றுத் தந் துள்ளார். எனவே அந்த இடத் தில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்றார் அமரமூர்த்தி.

No comments: