Friday, April 11, 2008

"ஒப்பந்தப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி.க்கு ஒதுக்கீடு தேவை'

சென்னை, ஏப். 10: பொதுப்பணித் துறை ஒப்பந்தப் பணிகளில் தாழ்த்தப் பட்ட, பழங்குடியின மக்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று விடு தலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.ரவிக்குமார் கோரிக்கை விடுத்தார்.பேரவையில் வியாழக்கிழமை நடை பெற்ற பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

பொதுப்பணித் துறை ஒப்பந்தப் பணிக ளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்க ளுக்கு நான்காம், ஐந்தாம் நிலை பணிகள் தான் கிடைக்கின்றன. மாவட்ட பொறி யாளர்கள், ஒப்பந்தப் பணிகளில் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயல்ப டுகின்றனர். இந்த நிலையை மாற்ற மத்தியப் பிர தேச மாநிலத்தில் உள்ளதுபோல தாழ்த் தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பொதுப்பணித் துறை ஒப்பந்தப் பணிக ளில் தனி ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.நான் 10 சதவீதம்கூட கேட்கவில்லை. ஒரு சதவீதமாவது தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

உடனே அனுமதி வழங்க வேண்டும்:

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் பழைய பள்ளிக் கட்டடங்களை இடித்து புதிதாக கட்ட பொதுப்பணித் துறையின் அனுமதி கிடைக்க காலதாமதம் ஆகிறது.எனவே வகுப்பறை விஷயத்தில் உடனடி யாக அனுமதி வழங்க அரசு சிறப்பு உத்தர வைப் பிறப்பிக்க வேண்டும்.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக, வீராணம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதனால் ஏரியின் மேற்குப் பகுதியில் உள்ள 15 கிரா மங்களில் உள்ள நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. கரும்பு பயிரை வெட்ட முடி யாத அளவுக்கு தண்ணீர் தேங்கி உள் ளது. இதற்கு அரசு தீர்வு காண வேண் டும்.

நீர்வள ஆதாரத் துறை என்று புதிய துறை உருவாக்கப்படுவதாக கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.நீர்ப்பாசனத் துறைக்கு தனி அமைச்ச கத்தை ஏற்படுத்த வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்:

பொதுப்ப ணித்துறை ஒப்பந்தப் பணிகளில் வேலை யின் தரம்தான் பார்க்கப்படுகிறது. ஜாதி பார்க்கப்படுவதில்லை. வீராணம் ஏரியின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமங்களில் நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது பற் றிய பிரச்னைக்கு தீர்வு காண நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

No comments: