சென்னை, ஏப். 9: எஸ்.எஸ்.எஸ். என்ற பெயரில் பஸ்களில் அநியாய கட்டணம் வசூலிக்கப்படுவதாக பாமக எம்.எல்.ஏ. எதிரொலி மணியன் குற்றம் சாட்டினார்.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசிய தாவது:
சென்னையிலிருந்து திருவண் ணாமலைக்கு சாதாரண பேருந் தில் ரூ. 55-ம், எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் ரூ. 62-ம் வசூலிக்கப்படுகிறது.ஆனால் தற்போது எஸ்.எஸ்.எஸ்.என்ற பெயரில் உலா வரும் பஸ்க ளில் ரூ. 72 அநியாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சாதாரண பஸ்களில் பயணம் செய்வதைவிட எஸ்.எஸ்.எஸ்.பஸ்களில் அரை மணி நேரம் மட் டுமே மிச்சமாகிறது. இந்த அரை மணி நேரத்துக்காக ரூ. 18 அதிக மாக வாங்குவது எந்த விதத்தில் நியாயம்?
தனியார் பஸ்கள் இரண்டு ஆண்டுகள் ஆனபிறகும் நல்ல நிலையில் உள்ளன. ஆனால் அர சுப் பேருந்துகள் தனியார் பஸ்கள் போல பராமரிக்கப்படாததால் மோசமான நிலையில் இருக்கின் றன.அதிகாரிகள், ஓட்டுநர், நடத்து னர்களை பஸ் பராமரிப்புக்குப் பொறுப்பு ஏற்கச் செய்ய வேண் டும். நகரங்களில் புதிய பஸ்களை விடும் அரசு கிராமங்களில் புதிய பஸ்களை இயக்குவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
அனைத்துப் பஸ்களிலும்...:
பாஸ் உள்ள மாணவ, மாணவி களை குறிப்பிட்ட நகர பஸ்களில் மட்டுமே ஏற்றுகின்றனர். இத னால் ஒரே பஸ்ஸில் கூட்ட நெரிச லில் மாணவர்கள் சிக்கி அவதிப்ப டுகின்றனர். அவர்களிடம் நடத்து னர்கள் கேவலமாகப் பேசுகிறார் கள். பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் காலை, மாலை நேரங்க ளில் சொகுசு பஸ்கள் நீங்கலாக மற்ற பஸ்கள் அனைத்திலும் அவர்களை பயணம் செய்ய அனு மதிக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் பயணச்சீட்டு:
திருவண்ணாமலைக்குச் செல் லும் அரசு பஸ்களில் ஆங்கிலத் தில் மட்டுமே பயணச்சீட்டு அச்ச டிக்கப்பட்டுள்ளது. செம்மொழி அந்தஸ்து கிடைத்த பிறகும் தமி ழுக்கு இப்படி ஒரு அவமானம் ஏற் பட்டுள்ளது.
எம்.எல்.ஏகளுக்கு அவமானம்:
அரசு பஸ்களில் எம்.எல்.ஏக்கள் இலவசமாகப் பயணம் செய்ய லாம் என்று அரசு அறிவித்துள் ளது. ஆனால் பஸ்களில் எம்.எல்.ஏக்களுக்கு உரிய மரி யாதை தருவதில்லை.வி.ஐ.பி. சீட்டில் கூட உட்கார வைக்காமல் அவமதிக்கின்றனர்.அதனால் பல எம்.எல்.ஏக்கள் தொங்கிக் கொண்டு செல்கின்ற னர். சில நேரங்களில் எம்.எல்.ஏக் கள் இன்ஜின் மீது உட்கார்ந்து பயணம் செய்கின்றனர்.
தமிழகத்தில் அதிகமான ஆம்னி பஸ்கள் ஓடிக் கொண்டி ருக்கின்றன. அவற்றின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? ஆம்னி பஸ்களுக்கென்று தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என் றார் எதிரொலி மணியன்.
No comments:
Post a Comment