Friday, April 11, 2008

எந்த ஏரியும் தானாக உடைவதில்லை

சென்னை, ஏப். 8: எந்த ஏரியும் தானாக உடைவதில்ல. ஏரியை ஆக்கிரமிப்பு செய்தவர்கள்தான் ஏரியை உடைக்கின்றனர் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் பேரவையில் தெரி வித்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை, கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து நடைபெற்ற விவா தம்:

ஆறுமுகம் (பாமக):

பெரு மழை வெள்ளம் ஏற்படும் மதகு ஓரங்களில்தான் ஏரிகள் உடை கின்றன. எனவே ஏரிகளின் மதகு களை வலுவுள்ளதாக அமைக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்:

எந்த ஏரியும் தானாக உடைவதில்லை.உடைக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.ஏரியை ஆக்கிரமிப்பு செய்தி ருப்பவர்கள்தான், தண்ணீர் புகுந்து தங்களுக்கு பாதிப்பு வந்து விடக் கூடாது என்பதற்காக ஏரி களை ஆங்காங்கே உடைக்கிறார் கள்.இப்படி ஏரிகளை உடைத்தவர் களை நாங்களே நேரில் பார்த்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.இதற்காகத்தான் ஏரி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள் ளது.

எம்.கே. விஷ்ணுபிரசாத் (காங் கிரஸ்):

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக் குட்பட்ட மாமண்டூர் கிராம ஏரி மிகப் பெரியது. இதுவரை இந்த ஏரி தூர்வாரப்படவில்லை.கரையை உயர்த்தி, மதகுகளை அதிகரிக்கவும், சீர் செய்யவும் அரசு முன்வருமா?

அமைச்சர் துரைமுருகன்:

மாமண்டூர் ஏரியின் கரையை உயர்த்த முடியாது. கரையை உயர்த்தினால், ஏரிக்கு எதிர் முனையில் உள்ள கிராமங்களில் வயல்வெளிகள் நீரில் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது.தேவையான மதகுகள் இருப்ப தால் மதகுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ரூ.2 லட்சம் செலவில் பழுதடைந்த இரண்டு மதகுகளைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

No comments: