Friday, April 11, 2008

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு நல்ல வரவேற்பு

சென்னை, ஏப். 11: தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார். பேரவையில் வெள்ளிக்கிழமை, கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

இல. வேலுசாமி (பாமக):

தருமபுரியில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடங்க அரசு முன்வருமா?

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்:

இந்துக்களில் தகுதியும், பயிற்சியும் பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. நீதியரசர் ராஜன் அளித்த பரிந்துரைப்படி 2 இடங்களில் வைணவப் பயிற்சி பள்ளியும், 4 இடங்களில் சைவ பயிற்சிப் பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது தருமபுரியில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி அமைக்கும் திட்டம் இல்லை.

மாலைராஜா (திமுக):

சைவத்தை யும் தமிழையும் வளர்த்த திருநெல்வேலியில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி அமைக்க வேண்டும்.

அமைச்சர் பெரியகருப்பன்:

இப் போதுதான் முதன்முறையாக அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் 207 மாணவர்கள் படித்து வரு கின்றனர். அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. புதிதாக அமைக்கப்படும்போது திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கமலாம்பாள் (பாமக):

தமிழகத்திலேயே மேல்மருவத்தூரில்தான் தமிழில் பெண்கள் அர்ச்சனை செய்கின்றனர். அதுபோன்ற நிலையை தமிழகம் முழுவதும் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் பெரியகருப்பன்:

இந்துக்களில் தகுதியும், பயிற்சியும் பெற்ற அனைவரும் அர்ச்சகர் ஆகலாம். இருந்தாலும் உறுப்பினர் சொன்ன நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments: