சென்னை, ஏப். 10: வால்பாறை யில் சிறுத்தைப் புலி தாக்கி இறந்த சிறுமி காயத்ரியின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்ப டும் என்று பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கி ரஸ் உறுப்பினர் கோவை தங்கம் இதுகுறித்து பேசியதாவது:
கோவை மாவட்டம் வால்பா றையில் அனலி பகுதியைச் சேர்ந்த வீரன் என்பவரின் மகள் காயத்ரி, மார்ச் 5-ம் தேதி சிறுத்தைப் புலி தாக்கி இறந்துள்ளார்.சிறுத்தைப் புலிகளை பிடிக்க குறைந்தது 20 கூண்டுகளையா வது அமைக்க வேண்டும். அரசு அனுமதி தந்தால் கூண்டுகள் வாங்க, எனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங் கத் தயாராக இருக்கிறேன்
.முதல்வர் கருணாநிதி:
கோவை தங்கம் ரூ.10 லட்சம் தந் தால் கூண்டுகள் வாங்கப்படும்.இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப் படும்.
No comments:
Post a Comment