சென்னை, ஏப். 9: தூத்துக்குடி மாவட்டம் சின்னார்குளம், சேர குளம் பகுதிகளில் இடி தாக்கி இறந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்ப டும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.பேரவையில் புதன்கிழமை, கேள்வி நேரம் முடிந்ததும், காங் கிரஸ் எம்.எல்.ஏ ராணி வெங்க டேசன் இது குறித்து பேசியதா வது:
தூத்துக்குடி மாவட்டம் சின் னார்குளம், சேரகுளம் பகுதியில் மார்ச் 8-ம் தேதி பகவதி அம் மாள், கோவில்பிள்ளை அம் மாள் ஆகிய இருவரும் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது இடி தாக்கி உயிரிழந்தனர்.மூன்று பேர் காயமடைந்துள்ள னர். உயிரிழந்த மற்றும் காயம டைந்தவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி:
தூத் துக்குடி மாவட்டம் சின்னார்கு ளம், சேரகுளம் பகுதியில் கடந்த மார்ச் 8-ம் தேதி இடி மின்னலு டன் பெருமழை பெய்தது.அதில் இடி தாக்கி இருவர் உயிரி ழந்தனர். மூன்று பேர் காயம டைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பகவதி அம்மாள், கோவில்பிள்ளை அம்மாள் ஆகிய இருவரின் குடும்பத் திற்கு தலா ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்படும். காயம டைந்து மருத்துவமனையில் உள்ள சங்கரம்மாள் (40), லீலா வதி (39), சிறுவன் பால்துரை ஆகியோருக்கு மாவட்ட ஆட் சித் தலைவரின் நேரடிப் பார் வையில் சிகிச்சை அளிக்கப்ப டும். அவர்களது சிகிச்சைக்கு தேவையான நிதி உதவியை அரசு வழங்கும்.
No comments:
Post a Comment