சென்னை, ஏப். 9: பஸ்களை தனி யார் மயமாக்க அதிமுக அரசு திட் டமிட்டது என்பதற்கு 2002-ம் ஆண்டு ஆளுநர் உரையை போக்கு வரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆதாரமாகக் காட்டினார்.பேரவையில் புதன்கிழமை போக் குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ. சண்முகவேலு பேசினார்.அப்போது குறுக்கிட்ட அமைச் சர் கே.என். நேரு போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்க அதி முக திட்டமிட்டது என்று குற்றம் சாட்டினார்.
அதனை அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன், அதி முக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மறுத்தனர்.முதல்வர் கருணாநிதி இந்தப் பிரச்னைக்கு ஒரு நீண்ட விளக்கம் அளித்தார். அதன் பிறகு பேரவை யில் அமைதி ஏற்பட்டது.
அதன்பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.ஆர். சுந்தரம் பேசும்போது பஸ்களை தனியார் மயமாக்க அதிமுக அரசு திட்ட மிட்டது என்று மீண்டும் பிரச் னையை கிளப்பினார்.அதற்கு அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன் எதிர்ப் புத் தெரிவித்தார்.
அப்போது குறுக் கிட்ட கே.என். நேரு, 2002 ஆளுநர் உரையில் 36, 37 பக்கத்தில் பத்தி 35-ல் ""போக்குவரத்துத் துறையில் தெரிந்தெடுக்கப்பட்ட பேருந்து வழித் தடங்களையும், சேவைகளை யும், பணிகளையும் படிப்படியாகத் தனியார் மயமாக்க இவ்வரசு முடிவு செய்துள்ளது'' என்று இருப்பதாக படித்தார்.அதற்காக 2002-ம் ஆண்டு நவம் பர் 11-ல் வெளியிடப்பட்ட அரசா ணையையும் அவர் பேரவையில் படித்துக் காட்டினார்.
அப் போது செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி குறுக்கிட்டு, அமைச்சர் கே.என்.நேரு ஆளுநர் உரையை ஆதாரமா கக் காட்டியுள்ளார். அதனை செங் கோட்டையன் ஏற்றுக் கொள்கி றாரா? இல்லையா? என்பதை விளக்க வேண்டும் என்றார்.அதற்கு பதிலளித்த செங்கோட் டையன், அதிமுக ஆட்சியில் அப் படி எத்தனை வழித்தடங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளது என்ப தற்கு பட்டியல் தரமுடியுமா என் றார்.
No comments:
Post a Comment