சென்னை, ஏப். 10: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத வீத ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப் புக்கு தமிழக சட்டப் பேரவையில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை விவாதம் நடந்து கொண்டிருந்தபோது குறுக்கிட்டு, அவை முன்னவரும் நிதி அமைச் சருமான க.அன்பழகன் பேசியதாவது:
""மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தீர்ப்பை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி 2007-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி சட்டப் பேரவையில் முதல் வர் கருணாநிதி ஒரு தீர்மானத் தைக் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
தற்போது இந்த இடைக்காலத் தடையை நீக்கி 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பினால் ஏற்பட்ட மகிழ்ச் சியை பேரவையின் உறுப்பினர்க ளோடு பகிர்ந்து கொள்கிறேன்'' என்றார் அன்பழகன்.
No comments:
Post a Comment