சென்னை, ஏப். 9: அதிமுக ஆட்சி யில் போக்குவரத்துத் துறை லாபத் தில் இயங்கியதாக அதிமுக எம்.எல்.ஏ சண்முகவேலு கூறி னார்.பேரவையில் புதன்கிழமை நடை பெற்ற போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் அவர் பேசியதாவது:
மத்திய அரசு 14 முறை பெட் ரோல், டீசல் கட்டணத்தை உயர்த் தியது. ஆனாலும் அதிமுக ஆட்சி யில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட வில்லை.2004-05 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை ரூ. 14 கோடி லாபம் ஈட்டியது. நம் நாட்டில் டாடா, அசோக் லைலண்டு போன்ற நிறுவனங்கள் இருக்கும் போது வெளிநாட்டு நிறுவனங்க ளில் இருந்து வால்வோ பஸ்களை அரசு வாங்குகிறது.பஸ்களுக்கு கூடு கட்டும் பணி களை அரசு தனியாருக்கு அளித் துள்ளது. அதனால் போக்குவரத் துத் துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
விபத்துக்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படுவதில்லை. பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று, பஸ் ஜப்தி செய்யப்பட்ட பிறகுதான் இழப்பீடு வழங்கப்படுகி றது. இந்த நிலை மாற வேண்டும்.சென்னை மாநகரில் ஓடும் ஷேர் ஆட்டோக்களைப் போல, சொகுசு பஸ்களிலும் ஆடு மாடுகளைப் போல பயணிகளை ஏற்றுகிறார் கள். ஷேர் ஆட்டோக்களைப் போல அரசு பஸ்களிலும் குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 5 வசூலிக்கி றார்கள்.
திமுக தேர்தல் அறிக்கையில்...
ரயில் கட்டண அளவுக்கு பஸ் கட்ட ணம் குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள் ளது. ஆனால் பல்வேறு பெயர்களில் பஸ்கள் விடப்பட்டு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.போக்குவரத்துத் துறை ஊழியர்க ளுக்கு ஓய்வு ஊதியத் தொகையை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment