சென்னை, ஏப். 11: விளம்பரப் பலகைகளை அகற்ற உயர் நீதிமன் றம் தடை விதிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள் ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள விளம்பரப் பலகைகளை அகற்றக் கூடாது என்று விளம்பர ஏஜென்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மார்ச் 9-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்த ரவைத் தொடர்ந்து அனுமதி இல் லாமல் வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நடவடிக்கைக்கு மார்ச் 11 (வெள்ளிக்கிழமை) முதல் மார்ச் 15 வரை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக உண்மைக்கு மாறான செய்திகளும், வதந்திக ளும் வந்துள்ளன.விளம்பரப் பலகைகள் அகற்று வது தொடர்பாக உயர் நீதிமன்றம் எந்த தடையாணையையும் பிறப் பிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதி பதிகள் பெஞ்ச் வெள்ளிக்கிழமை தெளிவுரை வழங்கியுள்ளது.
இந்த வழக்கு மார்ச் 15-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள் ளது என்றும் உச்ச நீதிமன்ற உத்த ரவின்படி அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில் அரசின் நடவடிக்கை தொடரும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment