Friday, April 11, 2008

"அரிசி விலையைவிட மணல் விலை அதிகம்'

சென்னை, ஏப். 10: அரிசி விலையைவிட மணல் விலை தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக மார்க் சிஸ்ட் எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் பேரவையில் குற்றஞ் சாட்டினார்.பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

ஒரு யூனிட் மணல் விலை ரூ. 300 என்று பொதுப்பணித் துறை கொள்கை விளக்க குறிப் பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எனது தொகுதி யில் உள்ள களியக்காவிளையில் ஒரு யூனிட் மணல் விலை ரூ. 3,500-க்கு விற்கப்படுகிறது.அரிசி விலையைவிட மணல் விலை அதிகமாக உள்ளது.

மணல் விலையேற்றத்தினால் பொதுப்ப ணித் துறை, உள்ளாட்சித் துறை மூலம் நடக்கும் கட்டடப் பணிகளும், இந்திரா தொகுப்பு வீடுகள் கட்டும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகள் இருந்தும் தற்போது கட்டப்ப டும் கட்டடங்கள் 10 ஆண்டுகள்கூட தாக்குப் பிடிப்பதில்லை. கமிஷனும், கையூட்டும்தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

பொதுப்பணித் துறையில் 10 ஆண்டுகளாக தினக் கூலிகளாகப் பணிபுரிபவர்களுக்கு நிரந்த ரப் பணி வழங்க வேண்டும். பணியின்போது உயி ரிழக்கும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண் டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2,500 குளங்களை தூர்வாரினால் வறட்சியே இல்லாத மாவட்டமாக அந்த மாவட்டம் மாறும்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எம்.கால்வாயை தூர்வாரி படகு போக்குவரத்தை ஏற் படுத்த வேண்டும் என்றார் ஜான் ஜோசப்.

No comments: