27 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு: கருணாநிதி நீதியை நிலை நாட்டுவார் சென்னை, ஏப். 11: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவ னங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு செல் லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.இந்தத் தீர்ப்பில் உள்ள குறைகளைப் போக்கி முதல்வர் கருணாநிதி நீதியை நிலை நாட்டுவார் என்று வேளாண்மைத் துறை அமைச் சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள் ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவ னங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.இந்தத் தீர்ப்பில் உள்ள குறைகளைப் போக்கி நீதியை முதல்வர் கருணாநிதி நிலை நாட்டுவார்.
1916 -1917-ம் ஆண்டுகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று நீதிக் கட்சி போராட்டம் நடத்தியது. 1921-ம் ஆண்டு நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த தும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை (கம்யூனல் ஜி.ஓ.) வெளியிடப் பட்டது. 2004-ம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலின்போது, மத்திய அர சின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வர பாடுபடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது.அதன்படி மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. ஏ.ஐ.எம்.எஸ். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்து அதனை சட் டமாக்கியது.
அதற்கு உச்ச நீதிமன்றம் இடைக் கால தடை விதித்தது. இந்த இடைக் காலத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த, மேல் முறையீட்டு வழக் கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொண்டது. இந்த வழக் கில் திமுகவின் சார்பாக வழக்கறிஞர் கள் வாதாடினார்கள்.வஞ்சிக்கப்பட்ட, புறக்கணிக்கப் பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்க ளின் முன்னேற்றத்துக்காக மார்ச் 10- ம் தேதி உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை சில ஆதிக்க சக்திக ளைத் தவிர அனைவரும் போற்றுகி றார்கள். 27 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே செயல்படுத்தப்படும் என்று அறிவித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர் ஜுன் சிங்குக்கு சேலம் மாவட்ட திமுக சார்பில் நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறேன்.
மாநிலத்தில் திமுக ஆட்சியும், மத்தி யில் திமுக கூட்டணி ஆட்சியும் அமையும் போதெல்லாம் பிற்படுத்தப் பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் முன்னேற் றத்துக்காக சட்டப்பூர்வமாக முடிந் ததை செய்து வருவதன் அடிப்படை யில் கிடைத்த வெற்றிதான் இன்று கிடைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பாகும் என்று வீரபாண்டி ஆறுமுகம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment