Friday, April 11, 2008

22 உழவர் சந்தைகளில் ஏ.சி. கிடங்கு

சென்னை, ஏப். 8: தமிழகத் தில் 22 உழவர் சந்தைகளில் ஏ.சி. கிடங்கு அமைக்கப்படும் என்று வேளாண்துறை அமைச் சர் வீபாண்டி ஆறுமுகம் சட் டப் பேரவையில் தெரிவித்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை, கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து நடை பெற்ற விவாதம்:

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்):

விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகள் போன்றவை கெடாமல் பாது காக்க, உழவர் சந்தைகளில் ஏ.சி. கிடங்கு அமைக்கும் திட் டம் அரசிடம் உள்ளதா?

அமைச்சர் வீரபாண்டி ஆறு முகம்:

15 மெட்ரிக் டன்னுக் கும் மேல் விற்பனை நடக்கும் உழவர் சந்தைகளில் ஏ.சி.கிடங்கு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. 22 உழவர் சந் தைகளில் ஏ.சி. கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏ. ராஜா (திமுக):
நாகர்கோ யில் தொகுதியில் ஈத்தாமொழி, தெங்கம் புதூர், புத்தளம் ஆகிய இடங்களில் உழவர் சந்தை அமைக்க அரசு முன்வருமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறு முகம்:

ஈத்தாமொழி, தெங்கம் புதூர், புத்தளம் ஆகிய இடங்க ளில் உழவர் சந்தை அமைக்க சாத்தியமில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.ஆனாலும் உறுப்பினர் தொடர்ந்து வலியுறுத்துவதால் மாவட்ட ஆட்சியரோடு தொடர்பு கொண்டு, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளோடு கலந்து பேசி, சாத்தியம் இருந்தால் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 104 உழ வர் சந்தைகள் உள்ளன. அவற் றில் 1,053 மெட்ரிக் டன் காய்க றிகள் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் 7,800 விவசாயிக ளால் கொண்டு வரப்பட்டு விற் பனை செய்யப்படுகின்றன.இதன் மூலம் 1,97,000 நுகர் வோர்கள் பயன் பெறுகின்ற னர்.கடந்த ஆண்டு புதிதாக 50 உழவர் சந்தைகள் அமைக்கப்ப டும் என்று அறிவிக்கப்பட்டது.அதில் 28 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கோவிந்தசாமி (மார்க் சிஸ்ட்):

திண்டுக்கல் மாவட் டம் ஒட்டன்சத்திரத்தில் மெகா உழவர் சந்தை அமைக்கப்ப டுமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறு முகம்: 1996-ம் ஆண்டே, ஒட் டன்சத்திரத்தில் மெகா உழவர் சந்தை அமைக்க திட்டமிடப் பட்டது.கடந்த அதிமுக ஆட்சியில் உழவர் சந்தைகளே கூடாது என்று முடிவு செய்து, 28 உழ வர் சந்தைகளை மூடினார்கள்.அந்த 28 சந்தைகளும் தற் போது சீரமைக்கப்பட்டு வரு கின்றன.உழவர் சந்தைகளை மூடிய அதிமுகவினரே, இப்போது கடந்த ஆண்டு 50 உழவர் சந் தைகள் தொடங்கப்படும் என்று அறிவித்தீர்களே, எப் போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்புகின்ற னர். அந்த அளவுக்கு இந்தத் திட்டம் அனைவரின் வரவேற் பையும் பெற்றுள்ளது.

ஜி.கே. மணி (பாமக):

புளி, மிளகாய் போன்ற நீண்ட நாள் பயன்படுத்தும் பொருட்க ளைப் பாதுகாக்க தனியார், ஏ.சி. கிடங்கு அமைத்து வாடைக்கு விடுகின்றனர். அது விவசாயிகளுக்கு கட்டுப்படி யாக வில்லை.எனவே பகுதிவாரியாக பெரிய அளவில் ஏ.சி. கிடங்கு அமைக்க அரசு முன்வருமா? வாழை போன்ற அழுகும் பொருட்களைப் பாதுகாக்க பெங்களூரில் உள்ளது போன்ற மார்க்கெட் அமைக்கப்படுமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறு முகம்:

தேனி மாவட்டம் சின்ன மனூரில் வாழையை பழுக்க வைக்க ரூ. 6 கோடியில் தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள் ளது.

No comments: