சென்னை, மார்ச் 31: யானை கள், காட்டுப் பன்றிகள், காட்டுக் குரங்குகள் போன்ற வன விலங் குகளைக் கட்டுப்படுத்த சூரிய மின்வேலி அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் என். செல்வராஜ் தெரிவித்தார்.பேரவையில் திங்கள்கிழமை, கேள்வி நேரத்தின்போது இதுகு றித்து நடந்த விவாதம்:
ஜான் ஜோசப் (மார்க்சிஸ்ட்):
கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் கோட்டத்தில் வனப் பகு தியில் யானைகள், காட்டுப் பன் றிகள், காட்டுக் குரங்குகள் அட் டகாசம் அதிகமாக உள்ளது.காட்டுக் குரங்குகள் வீடுக ளின் கூரைகளைப் பிரித்து உள்ளே நுழைந்து பொருட் களை நாசம் செய்கின்றன.இதை தடுக்க மின்சாரத் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.
அமைச்சர் என்.செல்வராஜ்:
கன்னியாகுமரி மாவட்டம் சிற் றார் கோட்டத்தில் காட்டு யானைகளின் வருகையைத் தடுக்க 2006-2007-ல் 10 கி.மீ தூரத்துக்கு சூரிய மின் வேலி அமைக்கப்பட்டது. 2007-2008-ல் 31 கி.மீ. தூரத்துக்கு சூரிய மின் வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது இந்த நிதியாண் டுக்குள் முடிக்கப்படும்.குரங்குகள் அறிவாற்றல் மிக்க விலங்கு. யானைகள் மின் வேலி யின் மீது காய்ந்த மரங்களைப் போட்டு கடந்துச் செல்ல முயற்சி செய்கிறது. வன விலங்கு களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்க ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மு. கண்ணப்பன் (மதிமுக):
தனியார்கள் முதலில் அகழி அமைத்து அதன் பிறகு மின்வேலி அமைக்கிறார்கள்.அதன் மூலம் யானைகளின் வருகை கட்டுப்படுத்தப்படுகி றது. அதுபோல வனத்துறையும் செய்யுமா? பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்க நிதி ஒதுக்கப் பட்டுள்ளது பற்றி அமைச்சர் கூறினார். பல நேரங்களில் மனித உயிர்களும் பலியாகின்றன.
அமைச்சர் என். செல்வராஜ்:
தேவையான இடங்களில் அகழி வெட்டி, சூரிய மின்வேலி அமைத்துள்ளோம். வன விலங் குகளால் கடந்த ஆண்டு இறந்த 30 பேருக்கு ரூ. 30 லட்சம் வழங் கப்பட்டது. இந்த ஆண்டு இறந்த 23 பேருக்கு ரூ. 23 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
கலைராஜன் (அதிமுக):
தமிழ்நாட்டில் மொத்தம் எத் தனை யானைகள் உள்ளன.அதில் ஆண் யானைகள், பெண் யானைகள் எவ்வளவு? யானை கள் காட்டை விட்டு நாட்டுக்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் என். செல்வராஜ்:
தமிழ்நாட்டில் சுமார் 4,015 யானைகள் உள்ளன. ஆண், பெண் யானைகளின் எண் ணிக்கை தெரியவில்லை.யானைகள் தண்ணீருக்காக வும், உணவுக்காகவும் காட்டை விட்டு வெளியே வருகின்றன.அதற்காக காடுகளில் சிறுசிறு தண்ணீர் குட்டைகளை அமைத் துள்ளோம். யானைகள் ஒரு நாளைக்கு 20 கி.மீ. இடம்பெய ரக் கூடியவை.
குத்தாலம் அன்பழகன் (திமுக):
கடந்த ஆட்சியில் முதுமலை யில் யானைகளுக்கு புத்து ணர்ச்சி முகாம் நடத்தப்பட்டது.அதுபோல இப்போது நடத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா?
அமைச்சர் என். செல்வராஜ்:
அப்படி எந்தத் திட்டமும் அர சிடம் இல்லை.
ஞானசேகரன் (காங்கிரஸ்):
ஜவ்வாது மலையில் உள்ள எனது ஐந்து ஏக்கர் நிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழு யானைகள் புகுந்து தென்னை மரங்களை நாசம் செய் துவிட்டது. அதனைத் தடுக்க மின்வேலி அமைக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்:
ஞானசேகரனுக்கு அதிகமான நிலங்கள் உள்ளன. மாமனார் வழியிலும் நிலங்கள் உள்ளன.எனவே ஜவ்வாது மலையில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு கொடுத்து விடுங் கள். யானைகள் மேய்ந்துவிட்டு போகட்டும்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment