சென்னை, ஏப். 1: ஒகேனக்கல் பிரச் னையில் தமிழக -கர்நாடக நல்லுறவுக்கு வேட்டு வைக்க வேண்டாம் என்று கன் னட அமைப்புகளுக்கு, அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் கண்டனம் தெரிவித்தனர்.சட்டப் பேரவையில் செவ்வாய்க்கி ழமை, ஒகேனக்கல் பிரச்னை குறித்து கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவா தம்:
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):
தரு மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளுக்காக அதிமுக ஆட் சியில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட் டம் தயாரிக்கப்பட்டது.ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்ட இந் தத் திட்டத்துக்கு அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை, மத்திய அரசு அனும திக்க வில்லை.இப்போது மத்திய அரசு அனும தித்து திட்டம் நிறைவேற இருக்கிற நிலையில், சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது இரு மாநில சகோதர உறவுக்கு வேட்டு வைக்கின்ற செயலாகும்.பெங்களூரிவில் தமிழ் படம் திரையி டப்பட்ட தியேட்டர்கள், தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள், தமிழ் சங்கம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு பாது காப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பக் கத்து மாநிலத்துக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மாட்டேன் என்று சொல்வது கண்டிக்கத் தக்கது. இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
ஞானசேகரன் (காங்கிரஸ்):
திங்கள் கிழமை பெங்களூரில் தமிழகத்தில் இருந்து சென்ற பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு, பயணிகள் இறக்கி விடப்பட்டுள்ளனர். தேர்தலில் வாக் குகளைப் பெற வேண்டும் என்ற குறு கிய அரசில் நோக்கத்துடன் இந்தப் பிரச்னையை பாஜக கிளப்பி உள்ளது.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத் துக்கு எடியூரப்பா இடையூறாக இருந்து வருகிறார். குடிநீருக்காக தண் ணீர் எடுப்பதை நீதிமன்றம்கூட தடுக்க முடியாது. கர்நாடகத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் தமிழர்களின் வாழ்வாதாரத் துக்கு விடப்பட்ட சவாலாகும். பெங்களூரில் தமிழர்கள் மீது தாக்கு தல் நடக்கும்போது கர்நாடக போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந் துள்ளனர். தாக்குதல் நடத்திய கன்னட அமைப்புகள் மீது நடநடிக்கை எடுக்க முதல்வர் முயற்சி செய்ய வேண்டும்.
ஜி.கே. மணி (பாமக):
வெறிபிடித்த சிலர் அரசியல் ஆதாயத்துக்காக இந்தப் பிரச்னையை எழுப்பி உள்ளனர். கன் னட வெறியர்கள் தமிழகத்துக்கு எதி ராக ஆட்டம் போட்டுக் கொண்டிருக் கிறார்கள்.கர்நாடகம் குடிநீர் திட்டத்தை எதிர்ப்பதோடு எல்லை பிரச்னையை யும் எழுப்பி இருக்கிறது. அவர்கள் எல்லை பிரச்னையை கிளப்பினால் நாங்களும் எல்லை பிரச்னையை கிளப் புவோம். பெங்களூரு, எங்களூரு என் போம். கோலார் தங்க வயலை மீட்க போராடுவோம். எடியூரப்பா தலைமையில் பாஜகவி னர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தபோது அவர்களை தமிழக எல்லைக்குள் தமி ழக போலீஸ் அதிகாரிகளே அனுமதித் துள்ளது வருந்தத்தக்கது.குடிநீர் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடக அரசிடம் மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையில் அதி முக உள்ளிட்ட அனைத்துக் கட்சிக ளும் முதல்வரின் பின்னால் அணிவ குத்து நிற்கிறது.
கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):
அர சியல் ஆதாயத்துக்காக பாஜக, இந்தப் பிரச்னையை கிளப்பி வருகிறது. மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட் டின் இறையாண்மையும், ஒற்றுமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.வை.
சிவபுண்ணியம் (கம்யூ னிஸ்ட்):
குடிநீர் திட்டத்தை நிறை வேற்ற கர்நாடகம் எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது. அரசி யல் ஆதாயத்துக்காக தமிழகத்தை மிரட்டுகிற நோக்கில் பாஜக செயல்ப டுகிறது.ஒகேனக்கல்லை பாதுகாக்க எந்த தியாகத்துக்கும் அந்தப் பகுதி மக்கள் தயாராக இருக்கிறார்கள்.இந்தப் பிரச்னையில் தமிழக மக்க ளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பந்த் போன்ற நடவடிக்கை களை அரசு அறிவிக்க வேண்டும்.
கம்பம் ராமகிருஷ்ணன் (மதிமுக):
கன்னட அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் தங்களது வெறித்தனத்தைக் காட்டி இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைத்துள்ளன.பெங்களூரில் தமிழர்களின் கருமாரியம் மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் தாக் கப்பட்டுள்ளன. முதல்வரின் உருவ பொம் மையும் எரிக்கப்பட்டுள்ளது. இது கண்ட னத்துக்குரியது. கர்நாடகத்தின் இந்த நட வடிக்கையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
செல்வம் (விடுதலைச் சிறுத்தை கள்):
கடந்த சில நாட்களாக பெங்களூ ரில் தமிழின விரோதிகள் வன்முறை யில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகத் தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை தமிழ் நடிகர், நடிகை கள் கண்டிக்க வேண்டும். இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண் டும்.
விஜயகாந்த் (தேமுதிக):
ஆடுகிற மாட்டை ஆடி கறக்க வேண்டும். பாடு கிற மாட்டை பாடித்தான் கறக்க வேண் டும். அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மத்திய அரசுக்கு ஒரு புள்ளி வைத்து அதனை நிறைவேற்ற முடியாமல் செய்து வருகின்றனர்.அதுபோல தமிழக அரசும் ஒரு புள்ளி வைக்க வேண்டும். அப்போது தான் இந்தப் பிரச்னை தீரும்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment