Friday, April 4, 2008

முரண்பாடுகளை சமன் செய்கிற பட்ஜெட்

சென்னை, ஏப். 2: முரண்பாடுகளை சமன் செய்கிற பட்ஜெட்டாக தமிழக பட் ஜெட் உள்ளது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்ஸ் பாராட்டு தெரிவித்தார்.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில் அவர் பேசியதா வது:

பல்வேறு முரண்பாடுகளை சமன் செய்கிற பட்ஜெட்டாக, தமிழக பட்ஜெட் உள்ளது. இந்த பட்ஜெட்டை பொருளாதார மேதை ப. சிதம்பரமே பாராட்டி உள்ளார். அதிக கற்பனை, நேர்முக சிந்தனை யோடு ஏழைகளின் வலியை உணர்ந்த முதல்வரால் மட்டுமே இதுபோன்ற சமநிலை பட்ஜெட்டை அளிக்க முடியும்.வயதாக வயதாக கற்பனை வளமும், சிந்திக்கும் ஆற்றலும், நகைச்சுவை ஆற்றலும் முதல்வரிடம் மெருகேறி வருகின்றன.இந்த வயதிலும் சுமார் 3 மணி நேரம் நிதி அமைச்சர் க. அன்ப ழகன் நின்று கொண்டே பட்ஜெட்டை படித்தார். அதற்கான ரகசிய சூத்திரத்தை எங்களுக்கும் அவர்கள் இருவரும் சொல்ல வேண்டும்.

மத்திய அரசு தனது நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகு தியை தமிழகத்துக்கு ஒதுக்கி வருகிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் அருண்கு மார், தமிழக அரசை "பீமா ஸ்டேட்' என்று வர்ணிக்கிற அள வுக்கு மத்தியில் நம் முதல்வருக்கு செல்வாக்கு உள்ளது.மரணத்திலிருந்து மீட்க முடியாது: ரூ. 7,000 கோடி விவ சாயக் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்தது. அதனை முன்மாதிரியாக கொண்டுதான் மத்திய அரசு ரூ. 60,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளது.இந்த நேரத்தில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாவிட் டால் விவசாயிகளை மரணத்திலிருந்து மீட்க முடியாது.

மனைவிகூட மதிப்பதில்லை:

நேர்மையாகக் கடனைக் செலுத்திய விவசாயிகளை, அவர்களது மனைவிகள்கூட மதிப்பதில்லை. எனவே கடனைக்கட்டிய விவசாயிகளைப் போற்றும் விதமாக அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும். அப்போதுதான் எம்.எல்.ஏக்கள் அதிகாரி களோடு தொடர்பு கொண்டு வளர்ச்சிப் பணிகளை கண்கா ணிக்க முடியும்.

நரகமாகி வரும் சென்னை:

சென்னை மாநகரம் மனிதர் கள் வாழத் தகுதியற்ற நரகமாக மாறி வருகிறது. இனி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்கினால் சலுகைகள் ஏதும் இல்லை என்று அறிவிக்க வேண்டும். இல்லையெனில் சென்னை மாநகரின் நெருக்கடியைக் குறைக்க முடியாது.

பெரியார் திரைப்படத்துக்கு நிதி உதவி அளித்ததுபோல காமராஜர் பற்றிய திரைப்படத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். சென்னையைச் சுற்றி பல இடங்களில் "அதிகார பத்திரம்' மூலம் நில மோசடி நடக்கிறது. இதனைத் தடுக்க வில்லங்க சான்றிதழில் அதிகாரப் பத்திரத்தையும சேர்க்க வேண்டும் என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

No comments: