Friday, April 4, 2008

யாருடைய ஆட்சியில் வீடுகள் கட்டப்பட்டன?

சென்னை, ஏப். 2: தமிழ்நாடு வீட் டுவசதி வாரியம் மூலம் கட்டப் பட்ட வீடுகள் தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே சட்டப் பேரவையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.இது குறித்து பேரவையில் புதன் கிழமை நடைபெற்ற விவாதம்:

அமைச்சர் ஐ. பெரியசாமி:

1996-2001 அதிமுக ஆட்சியில் உலக வங்கியில் இருந்து ரூ. 1,000 கோடி கடன் பெற்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடு கள் கட்டப்பட்டன.இந்த வீடுகள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக கட்டப்பட்டதால் மக்கள் வாங்கவில்லை.அதிமுக ஆட்சியில் இனி வீடு கள் கட்டப்படாது என்று உத்தர விடப்பட்டது. திமுக ஆட்சியில் இதுவரை 40,000 வீடுகள் கட்டப் பட்டு பத்திரங்கள் வழங்கப்பட் டுள்ளன.இந்த ஆண்டு 22,000 வீடுகள் கட்ட தயாராக இருக்கிறோம்.விவசாயிகள் -ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஒப்பந்தம்: வீடுகள் கட்டுவதற்காக கடந்த 10 ஆண்டுக ளாக விவசாய நிலங்கள் எங்கும் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை.ஏற்கனவே ஆர்ஜிதம் செய்யப் பட்ட நிலங்களை மீண்டும் கொடுக்க முடியாது.ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங் களை விவசாயிகள் நேரடியாகக் கேட்கவில்லை. எஸ்டேட் முதலா ளிகள் தான் விவசாயிகள் போர் வையில் நிலத்தை கைப்பற்றத் திட் டமிட்டு வருகிறார்கள். இதற்காக விவசாயிகளிடம் ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஒப்பந்தம் செய்துள் ளனர்.

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக) :

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தின் மூலம் 1996-2001 திமுக ஆட் சியில் கட்டப்பட்ட வீடுகள் தரம் குறைவாக இருந்ததால் யாரும் வாங்கவில்லை. அதனால் தான் தாற்காலிகமாக வீடு கட்டுவ தில்லை என்று அதிமுக ஆட்சி யில் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சர் ஐ. பெரியசாமி:

அதி முக ஆட்சியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக கட்டப்பட்ட வீடுகளை திமுக அரசு விற்பனை செய்ய நட வடிக்கை எடுத்து வருகிறது. வீடு களை விற்பனை செய்யும் பணி யைத்தான் அதிமுக அரசு செய் தது.

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக) :

இது பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கத் தயாரா? அமைச்சர் ஐ. பெரியசாமி: துறை மானியக் கோரிக்கையின் போது இதுபற்றிய புள்ளிவிவரங் களை அளிக்க தயாராக இருக்கி றேன்.

கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):

இடைத்தரகர்கள் தான் நிலத்தை மீண்டும் கேட்கி றார்கள். விவசாயிகள் கேட்க வில்லை என்று அமைச்சர் சொல் கிறார். ஆனால் பல இடங்களில் விவசாயிகள் நிலத்தைக் கேட்டு உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தி வருகி றார்கள்.

ஜி.கே. மணி (பாமக):

இடைத் தரகர்கள்தான் கேட்கிறார்கள் என்று சொல்வது தவறு. விவசாயி கள்தான் கேட்கிறார்கள்.அமைச்சர் ஐ. பெரியசாமி: ஒரு விவசாயி கூட நிலத்தைக் கேட்டு மனுக் கொடுக்கவில்லை.

No comments: